இலங்கை விளம்பரத்தை தடை செய்த சீன சமுக ஊடகங்கள் – கப்பல் விவகாரத்திற்கு பதிலடி

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு சீனக் கப்பல் வருவதை இடைநிறுத்த இலங்கை அரசாங்கம் நடவடிக்கை.

சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விளம்பர நிகழ்ச்சி சீனாவில் அனைத்து சமூக ஊடக வலையமைப்புகளிலிருந்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பிரச்சாரத்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமை ‘Douyin’ இல் முன்னெடுக்க இலங்கை அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பழிவாங்கும் நடவடிக்கை

ஆனால் அதனை நடைமுறைப்படுத்த முடியாது என இலங்கை தூதரகத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்ப்பை அடுத்து ‘யுவான் வாங் 5’ என்ற ஆராய்ச்சிக் கப்பலின் துறைமுக வருகையை இலங்கை ஒத்திவைத்ததற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அதிகாரிகள் நம்புகின்றனர்.

இலங்கை பொருள் கொள்வனவிலும் தாமதம்

அத்துடன், சீனாவில் உள்ள பல சமூக ஊடக இணையத்தளங்கள் இலங்கை தொடர்பில் எதிர்மறையான செய்திகளை வெளியிட்டுள்ளதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் சில சீன பல்பொருள் அங்காடிகள் இலங்கையில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை தாமதப்படுத்தி வருவதாகவும் தெரிய வந்துள்ளது.

 

 

-ibc