விமானம் தொலைந்துவிட்டதாக அஞ்சப்படுகிறது, விமானி தொடர்பை இழந்தார்

இன்று நண்பகலில் சுபாங்கிலிருந்து ஈப்போவிற்கு பறந்து கொண்டிருந்தபோது பிடோர் அருகே பைலட் மட்டும் இருந்த ஹெலிகாப்டர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.

தனியாருக்குச் சொந்தமான யூரோகாப்டர் ஹெலிகாப்டர்(Eurocopter helicopter) இரவு 11.37 மணிக்குச் சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா(Sultan Abdul Aziz Shah) விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மதியம் 12.37 மணிக்குச் சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில்(Sultan Azlan Shah Airport) தரையிறங்கியிருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங்(Wee Ka Siong) (மேலே) கூறினார்.

இருப்பினும், மலேசிய சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (Civil Aviation Authority of Malaysia) விமானத்தைக் காணவில்லை என்று அறிவிப்பதற்கு முன்பு மதியம் 12.16 மணிக்குக் கோலாலம்பூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்துடனான ரேடியோ தொடர்பை அது இழந்தது என்று அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விமானத்தின் கடைசியாக அறியப்பட்ட இடம் பிடோருக்கு அருகில் உள்ள வனப்பகுதி என்று வீ கூறினார்.

“இந்தச் சம்பவம்குறித்து CAAM மற்றும் போலீசார் மேலும் அறிக்கைகளை வெளியிடுவார்கள், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது,” என்று ஈப்போவில் உள்ள KTMB ரயில் நிலையத்திற்கு வருகை தந்தபோது அவர் கூறினார்.