தொகுதியில் உள்ள குழிகளை சரிசெய்ய சொந்தமாக களமிறங்கிய செபாங்கர் எம்பி அசிஸ் ஜம்மான்

தனது தொகுதியில் உள்ள குழிகள்  குறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் விரக்தியடைந்த செபாங்கர் எம்பி அசிஸ் ஜம்மான்,சொந்த முற்சியாக எடுத்துக்கொண்டு இரவு முழுவதும் அவற்றை சரிசெய்துள்ளார்.

தனது பகுதியில் சேதமடைந்த சாலைகள் குறித்து தனக்கு பல புகார்கள் வந்துள்ளதாக அஜீஸ் கூறினார், மேலும் வைரலான வீடியோக்களும் பள்ளங்கள் விபத்துகளுக்கு வழிவகுத்தன என இன்று ஒரு முகநூல் பதிவில் பதிவிட்டுள்ளார்.

களத்தில் இறங்கிய  எம்.பி. தனது தன்னார்வத் தொண்டர்களுக்கு உபகரணங்களை வாங்கியதுடன் அவர்களோடு இணைந்து குழிகளை மூடத் தொடங்கினார். அவர் இரவு முழுவதும் இந்த பணியை தொடர்ந்துள்ளார் என்பது அவர் முகநூல் பதிவின் மூலம் அறிய முடிந்தது.

இது ஆளும் அரசாங்கத்துக்கான வேலை, ஒரு எம்.பியுடையது அல்ல என்று ஆசிஸ் கூறினார், இந்த விஷயத்தை சமூக கூட்டத்தில்  பலமுறை எழுப்பியும் பலனில்லை.

அரசு அனைத்து ஒதுக்கீடுகளையும் கட்டுப்படுத்துகிறார்கள். அதில் எதுவுமே எனக்கு அனுப்பப்படவில்லை. ஆனால் மாநில அரசு புத்ராஜெயாவிடமிருந்து போதிய நிதியைப் பெறாமல் இருந்திருக்கலாம் என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

“எனவே, எனது சொந்த நிதி மற்றும் தன்னார்வ மையங்களை பயன்படுத்தி செயல்பட நான் முன்முயற்சி எடுத்தேன்.” என்று கூறிய அவர் இந்த முயற்சிக்கு உதவிய தன்னார்வலர்களுக்கும் பங்களிப்பாளர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்தார்.

வாக்காளர்களைக் கவருவதற்காக இதைச் செய்யவில்லை என்றும், தேர்தல்கள் நெருங்காதபோதும் அவர் எப்போதும் சேப்பாக்கத்தில் இருப்பது அவரது தொகுதி மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் கூறினார்.

 

-FMT