“அம்மா உண்மையில் நஜிப்பின் குரலையும் சிரிப்பையும் மிஸ்-பன்றாங்க: முன்னாள் பிரதமரின் மகள்

தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் மகள், தனது தாயின்  சோகத்தைப் படம்பிடிக்க முயற்சிக்கும் வகையில், தனது தாய் ரோஸ்மா மன்சோர் பிரார்த்தனை உடையில் காட்டும் சமூக ஊடகப் பதிவை வெளியிட்டுள்ளார்.

“அப்பா நம்மிடம் இல்லை, அவர்  இப்போது வீட்டிலும் இல்லை.

“நான் முடிந்தவரை மம்மிக்கு துணையாக இருக்க முயல்கிறேன், வீட்டிலுள்ள வெறுமையுடன் அவளது ஏக்கத்தை குணப்படுத்துகிறேன்.

“மம்மி, ஒரு மனைவி, உண்மையில் அருகாமையில் இல்லாத தனது கணவரின் குரல், சிரிப்பு, மகிழ்ச்சியை இழந்துள்ளார்” என்று நூர்யானா நஜ்வா நஜிப் இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.

“தற்போது தற்காலிகமாக எங்கள் வீட்டின் தலைவியாக பொறுப்பேற்று, அதே நேரத்தில் தனக்கான நீதிக்காக போராடும் ஒரு தாய்”.

“தாத்தா எங்கே?” என்று கேட்கும் பேரனின் கேள்விக்கு எப்படிப் பதில் சொல்வது என்று பாட்டி எப்போதும் கண்டுபிடிக்கும்,”

நூரியானா, சமீபத்தில் தனது தந்தையை, மறைந்த தென்னாப்பிரிக்க சுதந்திரப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலாவுடன் ஒப்பிட்டார்.

நஜிப் ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். ஆனால்,  மண்டேலா இனவாதம், சித்திரவதை மற்றும் அநீதிகளை முறியடிக்கப் போராடியதற்காக 27 ஆண்டுகள் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.