மாபெரும் போராட்டம் வெடிக்கும் -இலங்கை ஆசிரியர் சங்கம் அரசுக்கு கடும் எச்சரிக்கை

அரசாங்க ஊழியர்களின் சம்பளம் ஆசிரியர்களுக்குப் போதுமானதாக இல்லாததால் எதிர்காலத்தில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ள நாட்டில் பொறுப்புள்ள அரசியல்வாதிகள் தற்போது மக்களின் வரிப்பணத்தை அனுபவிப்பதுடன் மக்களின் உரிமையை பறித்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள்

இதை எதிர்த்துவரும் மக்கள் போராட்டங்களை அடக்கி ஆட்சியாளர்கள் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார்கள் என்று கூறும் ஜோசப் ஸ்டாலின், போராட்டம் ஒரு நாள் இந்த அமைப்பை அழித்துவிடும் என்றும் குறிப்பிடுகிறார்.

நாட்டு மக்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கைக்கு திரும்பியுள்ள முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக, மக்களின் வரிப்பணத்தில் தங்கியிருக்கும் அவருக்கும் அவரது குழுவினருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இணையச் சேவையொன்றுக்கு வழங்கிய விசேட கலந்துரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

 

-tw