பல மில்லியன்களை பெற்ற தாமரைக்கோபுரத்தின் மூன்றுநாள் வருமானம்!

கொழும்பில் உள்ள திறந்து வைக்கப்பட்ட மூன்று நாட்களில் தாமரைக் கோபுரத்திற்கு கிடைத்த மொத்த வருமானம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, திறக்கப்பட்ட முதல் நாளே பத்து லட்சம் ரூபாவை தாண்டி வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாகவும் மூன்று நாட்களில் மொத்தமாக 7.5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று நாட்களில் சுமார் 14,000 பேர் கோபுரத்தை பார்வையிட்டுள்ளதாக கொழும்பு தாமரைக் கோபுர நிறுவனத்தின் பிரதம நிர்வாக அதிகாரி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.

பார்வை நேரம்

தாமரை கோபுரத்தை மக்கள் பார்வையிடுவதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நேற்று (17) முதல் நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மதியம் 12:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை மக்கள் பார்வையிடலாம்.

எவ்வாறாயினும், இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி சீட்டுகள் வழங்கப்படும் என பிரசாத் சமரசிங்க மேலும் தெரிவித்தார்.

 

 

-tw