இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் தூதுவர்கள்: ஜனாதிபதியுடன் சந்திப்பு

இலங்கையில் பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் கனேடிய உயர்ஸ்தானிகரும் பிரான்ஸ் தூதுவரும் ஜனாதிபதியை சந்தித்துள்ளனர்.

நல்லெண்ணம் அடிப்படையில் பேச்சு வார்த்தை

இலங்கையில் தமது பதவிக் காலம் முடிந்து நாடு திரும்பவுள்ள கனடா உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் மற்றும் பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து ஆகியோர் இன்று காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் தனித்தனியாக சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பின்போது தமது பதவிக் காலம் முடிவடைந்துள்ளமை தொடர்பில் அவர்கள் ஜனாதிபதிக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.

பதவி காலம்

அதனை தொடர்ந்து ஜனாதிபதி, கனேடிய உயர்ஸ்தானிகர் மற்றும் பிரான்ஸ் தூதுவர் ஆகியோருடன் நல்லெண்ணம் அடிப்படையில் பேச்சில் ஈடுபட்டுள்ளார்.

டேவிட் மெக்கினொன் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் இலங்கைக்கான கனேடியத் தூதுவராகவும், எரிக் லவேர்து 2018 ஆம் ஆண்டு நவம்பர் 01 ஆம் திகதி முதல் இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tw