தனுஷ்கோடியில் அகதிகளாக தஞ்சமடைந்த இலங்கை தமிழர்கள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த மூவர் இன்றைய தினம் சனிக்கிழமை(22) கடல் மார்க்கமாக தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளனர்.

மன்னாரில் இருந்து படகு மூலம் புறப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் தவித்து வருவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அகதிகளின் எண்ணிக்கை

இதனையடுத்து மரைன் பொலிஸார் படகில் சென்று அவர்களை மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 184 ஆக உயர்ந்துள்ளது.

 

-tw