பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை

பெட்ரோலிய பொருட்களின் சில்லறை விலைகள் நவம்பர் 3 முதல் நவம்பர் 9, 2022 வரை மாறாமல் இருக்கும்.

இன்று நிதியமைச்சகத்தின் அறிக்கையின்படி, RON97 இன் விலை லிட்டருக்கு RM3.95, RON95 (RM2.05) மற்றும் டீசல் (RM2.15) லிட்டராக இருக்கும்

உலகளாவிய எண்ணெய் விலை உயர்விலிருந்து நுகர்வோரைப் பாதுகாக்க, சந்தை விலையின்படி நிர்ணயிக்கப்பட்டுள்ள RON97 பெட்ரோலின் சில்லறை விலையில் காணப்படுவது போல், RON95 மற்றும் டீசலுக்கான சந்தை விலை தற்போதைய உச்சவரம்பு விலைக்கு அப்பால் அதிகரித்திருந்தாலும், அரசாங்கம் RON95 இன் உச்சவரம்பு விலையை லிட்டருக்கு RM2.05 ஆகவும், டீசல் லிட்டருக்கு RM2.15 ஆகவும் பராமரிக்கும்.

“உலகளாவிய கச்சா எண்ணெய் விலையின் போக்குகளை அரசாங்கம் தொடர்ந்து கண்காணித்து, மக்களின் தொடர்ச்சியான நலன் மற்றும் நல்வாழ்வை உறுதிசெய்யப் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்,” என்று அமைச்சகம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தானியங்கி விலையிடல் பொறிமுறை (Automatic Pricing Mechanism) சூத்திரத்தைப் பயன்படுத்தி பெட்ரோலியப் பொருட்களின் வாராந்திர சில்லறை விலை அடிப்படையில் விலைகள் அமைக்கப்பட்டன.