இலங்கை போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக தடைவிதிப்பீர்களா – பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் கேள்வி

இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவை போன்று பின்லாந்து தடைகளை விதிக்குமா என அந்நாட்டுப் நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ கேள்வி எழுப்பியுள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பான கேள்விகளை பின்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹுசைன் அல்-ரயீ அந்நாட்டு அரசாங்கத்திடம் எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இனப்படுகொலை

குறித்த ஆவணத்தில்  இலங்கை அரசாங்கத்தினால் தமிழ் மக்களுக்கு எதிராகத் தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் இனப்படுகொலை குறித்தும் அவர் உள்ளடக்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இலங்கையின் போர்க்குற்றவாளிகளுக்கு எதிராக கனடா மற்றும் அமெரிக்காவை போன்று பின்லாந்தும் தடைகளை விதிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

 

 

-tw