ஊழல் விசாரணைக்கு உதவ காவலர் 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

சார்ஜன்ட் அந்தஸ்தில் உள்ள காவலர் ஒருவர் இன்று முதல் ஏழு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கெத்தும்(ketum) நீர் வைத்திருந்த குற்றத்தைச் செய்த சிலரை விடுவிப்பதற்காக ரிம7,000 லஞ்சம் கேட்டதாகச் சந்தேகிக்கப்பட்டதால் விசாரணைக்கு உதவுவதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குவாந்தான் மாவட்ட காவல் தலைமையகத்தின் போதைப்பொருள் பிரிவில் பணியாற்றும் 33 வயதான நபருக்கு எதிராகத் தெங்கு எலியானா துவான் கமருஸ்மான்(Eliana Tuan Kamaruzaman) இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

MACC சட்டம் 2009 இன் பிரிவு 17 (a) இன் கீழ் விசாரணைக்கு உதவுவதற்காகச் சார்ஜன்ட் நேற்று MACC அலுவலகத்தில் அவரிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.

வியாழக்கிழமை (பிப்ரவரி 16) சந்தேகநபர் கெத்தும் நீர் வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுச் செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்காக, காவலர் ரிம7,000 லஞ்சம் கேட்டதாகவும், அந்த நபர் ரிம2,000 அவரிடம் ஒப்படைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.