சுலு கூற்றுக்களுக்கு எதிராகத் தற்காத்துக் கொள்வதில் அரசாங்கம் தளராது – பாடில்லாஹ்

நாட்டின் உரிமைகளையும் இறையாண்மையையும் பாதுகாப்பதில் அரசாங்கம் சமரசம் செய்யாது, குறிப்பாக சுய-பிரகடனப்படுத்தப்பட்ட சுலு வாரிசுகளால் மலேசியாவின் சொத்துக்கள் மீதான உரிமைகோரல்கள் தொடர்பாக, துணைப் பிரதமர் ஃபாடில்லா யூசோப் கூறினார்.

வெவ்வேறு நாடுகளில் தாக்கல் செய்யப்பட்ட அவர்களின் உரிமைகோரல்களைக் கையாள வேண்டியிருந்தாலும் மலேசியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும் என்று அவர் கூறினார்.

“அதே நேரத்தில், இந்தக் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்று பிற ஐரோப்பிய நாடுகளிடையே (where there are Malaysian assets) விழிப்புணர்வை ஏற்படுத்த அரசாங்கம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது”.

“இந்தக் கூற்றுக்கள் பொருளாதார சூழலில் மலேசியாவை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகத் தெரிகிறது, ஏனெனில் அவர்கள் சில இலாபங்களை ஈட்டுவதற்கான வாய்ப்பைக் காணும் நிதியளிப்பவர்களைக் கொண்டிருக்கலாம்,” என்று ஃபாடில்லா (மேலே) கூறினார்.

பெட்ரா ஜெயா நாடாளுமன்ற அளவிலான உலக புற்றுநோய் தின நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

நேற்று, பெட்ரோனாஸ் ஒரு அறிக்கையில், லக்சம்பர்க்கில் உள்ள அதன் இரண்டு துணை நிறுவனங்கள்மீது சுலு வாரிசுகள் என்று கூறப்படுபவர்களின் கூற்றுக்கள் ஆதாரமற்றவை என்றும், சட்ட அம்சத்தில் அதன் நிலைப்பாட்டை அது தொடர்ந்து பாதுகாக்கும் என்றும் வலியுறுத்தியது.

இந்த வாரம் இரண்டு பெட்ரோனாஸ் துணை நிறுவனங்கள்மீது புதிய பறிமுதல் உத்தரவைப் பிறப்பிக்க லக்சம்பர்க் நீதிமன்றம் முடிவு செய்திருப்பது குறித்த ஊடக அறிக்கைகளை மேற்கோள் காட்டி இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.

இந்தப் புதிய பறிமுதல் உத்தரவில் 15 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.