பொருளாதார நெருக்கடியிலும் அதிகரித்த வாகன விற்பனை

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும், சந்தையில் வாகனங்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்த வாகனங்களின் விலை தற்போது ஸ்த்திர நிலையை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதன்படி பெரும்பாலானவர்கள் கடந்த காலங்களில் நாட்டை விட்டு வெளியேறியமையினால் வாகனங்களின் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தது.

எனினும், தற்போது கேள்வி அதிகரித்துள்ளதால், வாகனங்களின் விலை ஸ்த்திரநிலையை அடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரிஞ்சிகே தெரிவித்துள்ளார்.

 

-jv