ஐக்கிய தேசியக்கட்சியிலிருந்து 1,137 பேர் அதிரடியாக இடைநிறுத்தம்

ஐக்கிய தேசியக்கட்சி 1,137 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் கட்சி உறுப்புரிமைகளை இடைநிறுத்தியுள்ளது.

அந்த வகையில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிப்பதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இவர்களில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் கீழ் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

-tw