சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் எழுத்து புத்தகங்கள்

சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம்  வழங்கப்பட்டது.

இதன்படி, அரச தலைவருக்கு முறையே ‘சிங்கள எழுத்துக்கள் மற்றும் ‘தமிழ் எழுத்துக்கள் என பெயரிடப்பட்ட சிங்கள மற்றும் தமிழ் எழுத்து புத்தகங்கள் இன்று பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் தினேஷ் குணவரனவினால் வழங்கி வைக்கப்பட்டன.

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இரண்டு புத்தகங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்ளவுள்ள நிலையில், பெப்ரவரி 21ஆம் திகதி உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படும் சர்வதேச தாய்மொழி தினத்தை நினைவுகூரும் வகையில் இந்த விளக்கக்காட்சி வழங்கப்பட்டுள்ளது.

 

 

-if