உள்ளூராட்சி சபை தேர்தலுக்கு நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ள மக்கள் குழு

உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு நிதி திரட்டும் திட்டத்தை பாதுக்காவில் உள்ள மக்கள் குழுவொன்று ஆரம்பித்துள்ளது.

அதன்படி, பாதுக்கை அஞ்சல் நிலையத்தில் இருந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 100 ரூபா தொடக்கம் 500 ரூபா வரையிலான காசுக்கட்டளைகளை குழுவினர் நேற்று அனுப்பி வைத்துள்ளனர்.

மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான அடிப்படை உரிமையை பாதுகாக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும் தமது உரிமைகளை தாங்களே பாதுகாத்துக் கொள்வதற்காகவே நிதி திரட்டும் திட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் குறித்த மக்கள் தெரிவித்துள்ளனர்.

 

-tw