தமிழீழ விடுதலைப் புலிகளின் 9 ஆயுத கப்பல்களை அழிக்க அமெரிக்கா உதவியது – அலி சப்ரி

அமெரிக்காவின் புலானாய்வு தகவல்களே தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒன்பது ஆயுத கப்பல்கள் அழிக்கப்பட்டமைக்கும், அவர்களை தோற்கடிப்பதற்கும் உதவியதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேர்காணலொன்றில் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திருகோணமலையில் இராணுவ தளமொன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்காகவே சமீபத்தில் அமேரிக்காவின் உயர்மட்ட குழுவினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்படுவதையும் அவர் நிராகரித்துள்ளதுடன், இது முழுமையான முட்டாள்தனம் எனவும் கூறியுள்ளார்.

 

 

-tw