கிளந்தான் சுகாதாரத் துறை 2 குழந்தைகள் ஹீட்ஸ்ட்ரோக் மரணம்குறித்து விசாரிக்கிறது

ஹீட் ஸ்ட்ரோக் காரணமாக இறந்ததாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகளின் மரணத்திற்கான உண்மையான காரணம்குறித்து விசாரணை நடந்து வருகிறது.

இதைக் கிளந்தான் சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஜைனி ஹுசின் இன்று பெர்னாமாவுடன் உறுதிப்படுத்தினார்.

முன்னதாக, ஹீட்ஸ்ட்ரோக் காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் இரண்டு குழந்தைகளின் மரணம் சமூக ஊடகங்களில் வைரலானது.

அவர்களில் ஒருவர், 11 வயது சிறுவன், பசோக்கில் உள்ள பலாய் சுகாதார கிளினிக்கில் இறந்தார், மற்றொன்று, கோத்தா பாருவில் உள்ள கம்போங் கோத்தாவில் பதிவாகியுள்ளது. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.