மாநில தேர்தலின் போது  3R அம்சங்களைச் சேர்க்க வேண்டாம் – கெடா காவல்துறை

வரும் மாநிலத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதம், இறைமை மற்றும் இனம் போன்ற  3R அம்சங்களைத் தொட வேண்டாம் என்று அனைத்து கட்சிகளுக்கும் காவல்துறை நினைவூட்டியுள்ளது.

கெடா போலீஸ் தலைவர் பிசோல் சாலே(Fisol Salleh) கூறுகையில், மார்ச் மாதம் அமைக்கப்பட்ட  3R சிறப்புப் படை இந்த விவகாரத்தைக் கண்காணிக்கும்.

இது போன்ற விவகாரங்கள் குறித்து வீடியோ வடிவில் அடையாளம் காணப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டால் போலீசார் விசாரணை அறிக்கையைத் திறப்பார்கள்.

மாநிலத்திலும், நாட்டிலும் அமைதி காக்கப்படுவதை உறுதி செய்ய அனைத்து தரப்பினரும் தங்கள் பங்கை ஆற்ற வேண்டும் என்றும், முக்கியமான பிரச்சினைகளைத் தொடக்கூடாது என்றும் அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

கெடாவைத் தவிர, பினாங்கு, நெகிரி செம்பிலான், சிலாங்கூர், கிளந்தான் மற்றும் திரெங்கானு போன்ற ஐந்து மாநிலங்களும் விரைவில் மாநிலத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ளன.

மாநிலத் தேர்தலுடன் இணைந்து பேரணிகளை நடத்த விரும்பும் கட்சிகள் முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும் என்றும், இதனால் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகப் போலீசார் அந்த இடத்தில் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.