தேசத்தைக் கட்டியெழுப்பவே ‘Temu Anwar’, மாநிலத் தேர்தலுக்கு எந்தச் சம்பந்தமும் இல்லை – காலிட்

பிரதமர் அன்வார் இப்ராஹிம் சமீபத்தில் பல பல்கலைக்கழகங்களின் மாணவர்களைச் சந்தித்த ‘Temu Anwarர்’ திட்டம், நாட்டின் திசையைப் பகிர்ந்துகொள்வதையும், மாணவர்களை ஊக்குவிப்பதையும், தேசத்தைக் கட்டியெழுப்ப உதவும் மதிப்புகளை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம் பல்கலைக்கழகங்களில் நடத்தப்பட்ட ஒரு வெளிப்படையான அரசியல் பிரச்சாரம் என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்த உயர்கல்வி அமைச்சர் முகமட் காலிட் நோர்டின்(Mohamed Khaled Nordin), ஆகஸ்ட் 12 அன்று வரவிருக்கும் ஆறு மாநிலத் தேர்தல்களுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றார்.

மறுபுறம், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள்மீது மிகுந்த அக்கறை கொண்ட ஒரே பிரதமர் அன்வார் மட்டுமே என்று கோத்தாதிங்கி எம்.பி. கூறினார்.

அவரது உரைகளைக் கேட்கும்போது, மாணவர்கள் விமர்சன சிந்தனையுடன் இருக்க வேண்டும் என்றும், படைப்பாற்றல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார். அவர்கள் பகுத்தறிவுடன் சிந்திக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“நான் மாணவர்களுக்கு இதையே கூறுவேன், ஏனென்றால் நாட்டின் எதிர்காலம் அவர்களை எவ்வாறு வளர்க்கிறோம் என்பதைப் பொறுத்தது”.

“இது உடல் வலிமையைப் பற்றியது மட்டுமல்ல, மன மற்றும் ஆன்மீக வலிமையைப் பற்றியது. மலேசியா மதானி கருத்தாக்கத்திற்கு ஏற்ப நாங்கள் அடைய விரும்பும் மூன்று முக்கிய அம்சங்கள் இவை,” என்று அவர் இன்று கோத்தாதிங்கியில் உள்ள இடைநிலைப்பள்ளி  டான் ஸ்ரீ ஜாபர் அல்பாரில் செய்தியாளர்களிடம் கூறினார்”.

தம்புன் நாடாளுமன்ற உறுப்பினர் ‘தெமு அன்வர்’ திட்டத்தை நிறுத்திவிட்டு, அதற்குப் பதிலாக மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களைக் கையாள்வதிலும், பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முழுமையாகக் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒரு சில கட்சிகள் கூறிய கருத்துக்கள் குறித்து அவர் கருத்துத் தெரிவித்தார்.

இன்று முன்னதாக, கலீத் பள்ளியில்  UPSI Smarthome Schooling@Johor திட்டத்தைத் தொடங்கினார், இது பள்ளி பாடத்திட்டத்தின் ஐந்து முக்கிய பாடங்களில் கவனம் செலுத்தும் ஒரு கல்வித் திட்டமாகும்.

2023 சிஜில் பெலஜாரன் மலேசியா தேர்வில் பங்கேற்கும் B40 மாணவர்களுக்கான கல்வித் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கம்.

இந்தப் பயிற்சித் திட்டம் ஆகஸ்ட் 1 முதல் 22 வரை நடத்தப்படும் மற்றும் கோத்தா திங்கியில் உள்ள ஆறு பள்ளிகளை உள்ளடக்கியது.