மிகப்பெரிய தூதுக்குழுவுடன் இலங்கை விரைகிறார் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்

மிகப்பெரிய தூதுக்குழுவுடன் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் யோசிமசா அயாஸி இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 24 பேர் அடங்கிய தூதுக்குழுவினருடன் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்,

அடுத்த வாரம் இலங்கைக்கு

ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் அடுத்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் கடன்மறுசீரமைப்பு திட்டம் தொடர்பில் இதன்போதுஅவர் கவனம் செலுத்துவார்.

இந்த விஜயத்தின் போது அதிபர் ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஸ் குணவர்த்தன, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

-ibc