வழங்கப்படும் சேவைகளை சீராக கொண்டு செல்ல வரிக் கொள்கை அவசியம்

அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற சேவைகளை சீராக கொண்டுசெல்ல வேண்டும் என்றால் மக்கள் வரி செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளக்கூடாது என  வடக்கின் ஆளுனர் திருமதி சார்ளஸ் வலியுறுத்தியுள்ளார்.

வரிக்கொள்கை மற்றும் IMF நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஒன்றிணைந்த நாட்டை கட்டியெழுப்புவோம் என்ற நிகழ்வு யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வரியை சரியான வழிமுறையில் செலுத்துவதற்கு நாங்கள் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும் வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நாட்டின் நலன்கருதியதான இந்த நோக்கத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதும் இங்கே மிக முக்கியமான ஒரு விடயமாக இருக்கின்றது.

நாட்டின் வருமானம்

தற்போது அதிகமானோர் யாழ்ப்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் இருக்கின்றார்கள்.

புலம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றவர்களுக்கு தெரியும் உலக நாடுகளில் எவ்விதமாக இந்த வரி அறவீடுசெய்யப்படுகின்றத, குறித்த வரி அந்நாடுகளின் வருமானத்தில் எத்தகைய பெரும் பகுதியாக காணப்படுகின்றது என்றும் உணர்ந்துகொள்ள முடியும்.

எனவே அந்த வகையிலே எங்களுடைய நாட்டிலே வரி அறவீடு தொடர்பில் மிக இலகுவான காரியமாக அல்லது புரிந்துகொள்ளக் கூடியதாக இருக்கும் என நினைக்கின்றேன்.

அதேநேரம் பல பேர் அந்த வரியில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கும் நடைமுறைகளை கையாளுகின்றனர்.

எனவே இந்த நாட்டின் குடிமக்கள் என்ற ரீதியிலும் இந்த நாட்டிலே பல தேவைகளை நாங்கள் பெற்றுக் கொள்கின்றவர்கள் என்ற ரீதியிலும் எங்களுக்கு ஒரு பொறுப்பு இருக்கின்றது என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

பொருளாதார பங்களிப்பு

அத்துடன் நாங்களும் இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பவர்களாக இருக்க வேண்டும்.

இதேநேரம் அரசு ஈட்டுகின்ற வருமானத்தில் வருமான வரி மூலம் அல்லது வருமான வரி செலுத்துகின்றவர்களின் தொகை இந்த நாட்டின் மொத்த குடித்தொகையில் மிகவும் குறைவான ஒரு தொகையாகத்தான் இருக்கின்றது.

அந்த வகையிலே நாட்டினுடைய வருமான வரியை திருத்த வேண்டிய ஒரு தேவை எமது நாட்டிற்கு தேவையாக இருக்கின்றது.

அதனால் இந்த வரிக் கொள்கையில் நாங்கள் இணைந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்காளர்களாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

-tw