தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவு வழங்கத் தயார் – ஜப்பான்

இலங்கைக்கு வருகைத் தந்துள்ள ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா , தொடர்ச்சியான காலங்களிலும் இலங்கைக்கு  ஆதரவு வழங்கத் தயாராகவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இன்று இலங்கை அதிகாரிகளுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறுக் கருத்துத் தெரிவித்துள்ளார்.

மேலும் கடன் வழங்கும் அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய வெளிப்படையான மற்றும் ஒப்பிடக்கூடிய கடன் மறுசீரமைப்பு செயன்முறையின் முக்கியத்துவம் பற்றியும் விளக்கமளித்துள்ளார்.

 

 

-tw