இலங்கை பாடசாலை சிறுவர்களை சந்தித்த இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பாடசாலை ஒன்றில் பிள்ளைகளுடன் அவர் அளவளாவும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அத்துடன் யுனிசெவ் அமைப்பின் கௌரவ தூதுவராகவும் செயற்படும் சச்சின் டெண்டுல்கர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் சப்பிரகமுவ மாகாணத்தில் உள்ள பாடசாலையொன்றிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

ஆளுநர் நவீன் திசநாயக்கவும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளார். இலங்கையில் கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிறுவர்களிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்த நிகழ்வில் சச்சின் கலந்துகொள்ளவுள்ளார்.

 

 

-jv