நாடு முழுவதும் தடையில்லா மின்சாரம்

நாடு முழுவதும் தடையின்றி மின்சார விநியோகம் வழங்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின்வெட்டு நடைமுறை

நாட்டில் மின்வெட்டை நடைமுறைப்படுத்துவதற்கான எந்தவொரு திட்டமும் கிடையாது எனவும் அவர் கூறியுள்ளார்.

24 மணிநேரமும் தொடர்ச்சியாக தடையின்றி மின்சார விநியோகத்தை வழங்குவதற்கான மேலதிக மின்சாரம், இலங்கை மின்சார சபை வசம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

-ib