இலங்கையில் மருத்துவர்கள் பற்றாக்குறை – வெளிநாட்டிலிருந்து வரவழைக்கும் நிலை

மருத்துவர் பற்றாக்குறை தொடருமானால் வெளிநாட்டு மருத்துவர்களை இந்நாட்டிற்கு கொண்டு வரவேண்டிய நிலை ஏற்படலாம் என விசேட வைத்தியர்கள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் டொக்டர் அசோக குணரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட மருத்துவர்கள் வெளியேறியமையினால் வைத்தியசாலைகள் எதிர்நோக்கும் நெருக்கடிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் அசோக குணரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான வரிக் கொள்கைகள்

அரசாங்கம் விதித்துள்ள கடுமையான வரிக் கொள்கைகள் மற்றும் நாட்டில் தற்போது நிலவும் ஸ்திரமற்ற நிலையே வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முக்கிய காரணம் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றிய ஒரேயொரு மயக்க மருந்து நிபுணரும் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், வைத்தியசாலை எதிர்நோக்கும் நெருக்கடிக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு சுகாதார தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதுகுறித்து, அகில இலங்கை தாதியர் சங்கத்தின் ஹம்பாந்தோட்டை மருத்துவமனை கிளையின் தலைவர் உஜித் பத்மேந்திரா கருத்து தெரிவிக்கயைில்,

“தற்போது சத்திரசிகிச்சைகளை மேற்கொள்வதும், தீவிர சிகிச்சைப் பிரிவைப் பராமரிப்பதும் பாரிய சவாலாக உள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலை பல பிரதேசங்களில் பல நோயாளிகளுக்கு சேவைகளை வழங்கி வருகின்றது.

அமைச்சு உடனடியாக தலையிட்டு இந்தப் பிரச்சினைக்கு விரைவான தீர்வை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.

 

 

-ib