ஐஎம்எப் உடன் இணைந்து செயல்படுவதில் சிக்கல் இல்லை

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயல்படுவதில் எவ்வித சிக்கலும் கிடையாது என தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நலிந்த ஜெயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுவதற்கு தயங்கப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனை கூறியுள்ளார்.

மக்களின் ஆணைக்கு மதிப்பளித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கொடுக்கல் வாங்கல் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் ஆணைக்கு உட்பட்ட வகையிலான யோசனைகள் நடைமுறைப்படுத்தப்படும்.

தற்போதைய அரசாங்கம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக சர்வதேச நாணய நிதிய யோசனைகளுக்குள் மறைந்து கொண்டு பொருளாதார பிரச்சினைகளை மேலும் காலம் தாழ்த்துவதற்கு முயற்சிக்கிறது என கூறியுள்ளார்.

இதேவேளை அரசாங்கம் உரிய நேரத்தில் உதவி பெற்றுக் கொள்ள தவறியதனால் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு அடிபணிந்து செயல்பட நேரிட்டுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

-tw