உலகக் கோப்பையில் அதிவேக சதமடித்த வீரர்: குசால் மெண்டிஸ் புதிய சாதனை

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை வீரர் ஒருவர் அடித்த அதிவேக சதம் என்ற புதிய சாதனையை குசல் மெண்டிஸ் படைத்துள்ளார்.

இவர் 65 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கலாக சதத்தை பதிவு செய்துள்ளார்.இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் 122 ஓட்டங்களையும், சதீர சமரவிக்ரம 108 ஓட்டங்களையும், பதும் நிஸ்ஸங்க 51 ஓட்டங்களையும் பெற்றனர். மேலும் சதீர சமரவிக்ரம இன்றைய போட்டியில் 82 பந்துகளில் தனது முதல் ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

பந்துவீச்சில் ஹசன் அலி 04 விக்கெட்டுக்களையும், ஷஹீன் ஷா அப்ரிடி, மொஹமட் நவாஸ், ஷதாப் கான், ஹரிஸ் ரவூப் ஆகியோர் தலா 01 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

அதன்படி, 345 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் அணி துடுப்பெடுத்தாடவுள்ளது.

 

-tw