சீன கப்பல் வருகைக்கு அனுமதி வழங்கிய இலங்கை

ஷி யான் 6 சீன ஆய்வுக் கப்பலை இலங்கையில் நங்கூரமிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை இந்திய ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்த மாதம் இலங்கைக்கு பிரவேசிப்பதற்கான அனுமதியை சீனக் கப்பல் கோரியிருந்தது. எனினும், எதிர்வரும் நவம்பர் மாதத்தில் சீனக் கப்பலை நங்கூரமிடுவதற்கு அரசாங்கம் அனுமதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறிப்பிட்டுள்ளார்.

அதோடு ஷி யான் 6 என்ற சீனக் கப்பல் இலங்கை கடற்பரப்பில் நங்கூரமிடும் போது, அதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருக்க வேண்டும் என்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

இந்த நிலையிலேயே சீன கப்பல் வருகைக்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளதாக இந்தொய ஊடகம் தெரிவித்துள்ளது.

 

 

-jv