கொழும்பில் இடம்பெற்று வரும் ஆசிரியர்களின் பேரணி மீது கண்ணீர்ப் புகை தாக்குதல்

ஆசிரியர் – அதிபர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மீது பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர் புகை தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

இசுருபாய கல்வி அமைச்சுக்கு முன்பாக இந்தப் ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் மூன்று பாலச் சந்தியை நோக்கி பேரணியாகச் சென்றபோது, ​​பொலிஸார் நீர் மற்றும் கண்ணீர்ப்புகைப் பிரயோகத்தை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக பொரளை – கொட்டாவ பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

 

 

 

-an