பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக கவனயீர்ப்பு போராட்டம்

யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் இன்று (27) பலஸ்தீன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து முஸ்லீம் மக்கள் கவனயீர்ப்பு போராட்டமொன்றை மேற்கொண்டனர்.

இன்று மதியம் இடம்பெற்ற ஜும்மா தொழுகையினை தொடர்ந்து போராட்டகாரர்கள் ஐந்து சந்தி வரை பேரணியாகச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் அனைத்து பள்ளிவாசல் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற போராட்டத்தில் சர்வதேச சட்டங்கள் இஸ்ரேலுக்கு பொருந்தாதா, அமெரிக்காவின் குழந்தை இஸ்ரேலே தாக்குதலை உடன் நிறுத்து போன்ற வாசகங்கள் மும்மொழிகளிலும் அடங்கிய அட்டைகள் போராட்டகாரர்களால் தாங்கப்பட்டிருந்தது.

இஸ்ரேல் – பலஸ்தீனம் இடையே தற்போது மோதல் இடம்பெற்று வருகின்றமை சர்வதேச ரீதியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 

 

-an