கிரிக்கெட் தடை சர்ச்சை: கோப் குழுவின் தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்

கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம். கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கையை காரணமாகவே, இந் நம்பிக்கையில்லாப் பிரேரணை எதிர்வரும் வாரத்தில் சபாநாயகரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுகின்றது.

குறித்த தகவலை ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் லக்ஷ்மன் கிரியெல்ல  தெரிவித்துள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற இலங்கை கிரிக்கெட் அதிகாரிகளுக்கும் கோப் குழுவுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது கோப் குழு தலைவரின் முறையற்ற நடவடிக்கை ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டுக்கள் எழுந்துள்ளது.

இந்நிலையிலேயே, கோப் குழுவின் தலைவர் ரஞ்சித் பண்டாரவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

-tw