அரசியலில் இருந்து ஓய்வு என்ற பேச்சுக்கே இடமில்லை:மகிந்த

தற்போதைக்கு அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் இல்லை என சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் பெருமளவில் பெரமுனவுடன் இணைந்துள்ளதாகத் தெரிவித்த அவர், சில மாற்றங்கள் ஏற்பட்டாலும் அடிமட்டத்தில் இருந்து மக்கள் நகரவில்லை என்றும் அவர் கூறினார்.

பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டில் அது நிரூபணமானது என்றும், ஒவ்வொரு கட்சியும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும், இது போன்ற செயல்களால் கட்சியின் பலத்தை காட்ட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பெரமுன மீது மக்களுக்கு இன்னும் நம்பிக்கை இருப்பதாகவும், எதிர்வரும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் தகுதி தனக்கு இல்லை எனவும், ஆனால் கட்சி யாரை தீர்மானித்தாலும் வெற்றிபெற பாடுபடுவேன் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

 

 

-tw