சம்பளம் வாங்காத பிரதமரால் மாதம் 23,000 ரிங்கிட்டை அரசாங்கம் சேமிக்கிறது

நவம்பர் 2022 முதல் பிரதமராக பதவி வகித்த அன்வார் இப்ராஹிம் தனது சம்பளத்தை எடுக்கவில்லை என்ற முடிவினால் அரசாங்கம் ஒரு மாதத்திற்கு சராசரியாக RM22,826.65 சேமித்துள்ளது.

பிரதம மந்திரி துறையின் அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபாவின் கூற்றுப்படி, இந்த தொகையானது பிரதமரின் அடிப்படை ஊதியத்திற்காக ஒதுக்கப்பட்ட செலவினங்களின் மதிப்பீடாகும்.

ஜலிஹா மொத்தத் தொகையைக் கொடுக்கவில்லை என்றாலும், மதிப்பிடப்பட்ட தொகை ரிங்கிட் 300,000க்கு மேல்.

அன்வார் தனது சம்பளத்தை எடுக்க மறுத்ததால் அரசாங்கம் சேமித்த தொகை குறித்து நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் அவ்வாறு கூறினார்.

நவம்பர் 24, 2022 அன்று பிரதமராக இருந்த தனது முதல் செய்தியாளர் கூட்டத்தில், அன்வார் தனது பிரதமர் மற்றும் நிதியமைச்சர் பதவிகளுக்கு சம்பளம் வாங்கப் போவதில்லை என்று கூறினார், இது தனது தலைமையின் மீது மக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான முதல் படி என்று விவரித்தார்.

இந்த ஆண்டு ஜனவரியில், அவர் தனது நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார், நாட்டின் பொருளாதாரம் முழுமையாக மீட்கப்படாத வரை தனது பதவிகளுக்கு ஊதியம் பெறமாட்டேன் என்று கூறினார்.

அமைச்சரவை உறுப்பினர்களுக்கான சம்பளக் குறைப்புக்கும் இது பொருந்தும் என்றும் அவர் மேலும் கூறினார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரதமர் துறை அமைச்சர் (சபா, சரவாக் விவகாரங்கள் மற்றும் சிறப்புப் பணிகள்) அர்மிசான் முகமட் அலி, அமைச்சரவை உறுப்பினர்களின் ஊதியக் குறைப்பிலிருந்து மாதம் 100,000 ரிங்கிட் சேமித்துள்ளதாகவும், இது வருடம் RM1.2 மில்லியன் வரை வரும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.