நீண்ட விடுப்பில் இருப்பதாகக் கூறப்படும் பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி தொடர்பாக எந்தப் பிரச்சினையும் இல்லை என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஒரு ஊழியருக்கு விடுப்பு கோரிக்கை ஒரு சாதாரண விஷயம் என்று விவரித்த அன்வார், விடுப்பு எடுக்கப் பொருத்தமான நேரத்தையும் தேடுவதாகக் கூறினார்.
“சில நாட்கள் விடுமுறை, எந்தப் பிரச்சினையும் இல்லை. எனக்கும் சில நாட்கள் விடுமுறை வேண்டும்,” என்று அவர் இன்று ஜெஞ்சாரோமில் உள்ள பந்தர் சௌஜனா புத்ரா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
பிகேஆர் துணைத் தலைவரான ரஃபிஸி, கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் அதிருப்தி அடைந்ததால் மே 31 வரை விடுப்பில் இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுகள்குறித்து கேட்டபோது அவர் இவ்வாறு கூறினார்.
மே 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கும் 46வது ஆசியான் உச்சிமாநாட்டிற்குப் பிறகு தான் விடுப்பு எடுக்க விரும்பலாம் என்றும் அன்வார் சூசகமாகக் கூறினார்.
“நான் இன்னும் எந்த விடுப்பும் எடுக்கவில்லை, இந்த உச்சிமாநாட்டிற்குப் பிறகு, எனக்குச் சில நாட்கள் விடுமுறை கிடைக்குமா?” என்று அவர் கேட்டார்.