முல்லைத்தீவில் வறுமை காரணமாக இளம் தம்பதியினர் தற்கொலை!

முல்லைத்தீவில் அமைந்துள்ள முல்லியவலை – பாலக்கன்னி குமாரபுரம் பகுதியைச் சேர்ந்த இளம் கணவன் மனைவி ஜோடி வறுமை காரணமாக விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பரிதாபகரமான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

நேற்று இரவு வேளையில் அவ்விருவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக முல்லைத்தீவு காவல்துறையினர் தெரிவித்தனர்.

29 வயதுடைய சண்முகன் நெரஞ்சன் மற்றும் அவருடைய மனைவியான நெரஞ்சன் சங்கீதா ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குடும்ப வறுமை நிலை காரணமாக இவர்கள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என காவல்துறை விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.