“இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க மாட்டோம்”: இந்தியா

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் அதனை ஆதரிக்கப் போவதில்லை என இந்தியா அறிவித்துள்ளது.

குறிப்பிட்ட நாடுகளுக்கு எதிராக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் ஐ.நா மனித உரிமை மன்றத்தை பலவீனப்படுத்தும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படும் அனைத்துலக கால மதிப்பீட்டின் போது மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

மாறாக தனிப்பட்ட ரீதியில் நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது பொருத்தமாக அமையாது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை மன்றத்தின் அகப்பக்கத்தில் இந்திய அரசு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.