200 இலங்கை அகதிகளை ஏற்றிச்சென்ற படகு விபத்து

ஆஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரிச் சென்ற 200 இலங்கைத் தமிழ் அகதிகளின் படகு கிறிஸ்மஸ் தீவிற்கு அருகில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்தின்போது 75-க்கும் மேற்பட்டோர் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

படகு விபத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியில் அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளதாகவும் எண்ணிக்கை விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை எனவும் சர்வதேச செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.