படகு விபத்தில் காப்பற்றப்பட்டவர்களில் இலங்கையர் எவரும் இல்லை

ஆஸ்திரேலிய கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்து காப்பாற்றப்பட்ட 110 பேரில் இலங்கையர்கள் எவரும் இல்லை என இந்தோனேசியாவிலுள்ள இலங்கைத் தூதுவர் மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் என நம்பப்படும் 200 அகதிகளை ஏற்றிச் சென்ற படகொன்று நேற்று கிறிஸ்மஸ் தீவுப் பகுதியில் விபத்துக்குள்ளானது. அதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்ட ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேசிய பாதுகாப்பு கடற்படையினர் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 110 பேரைக் காப்பாற்றியுள்ளனர்.

காப்பாற்றப்பட்ட 110 பேரில் 4 பேர் பின்னர் உயிரிழந்ததாகவும் இவர்களில் இலங்கையர்கள் எவரும் இல்லை எனவும் இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்த படகு விபத்துச் சம்பவத்தில் பலியான அனைவரும் இந்தோனேசியாவைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.