வவுனியா சிறைச்சாலையினுள் புலிகளின் மாவீரர் நினைவுத் தூபி!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படுவோர், போரின் போது கொல்லப்பட்ட புலிகளின் மாவீரர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில் சிறீலங்கா பாதுகாப்பு படையினர் அதனை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சிறைக் கூண்டுக்குள் பதுங்கு குழி போல் அமைத்து அதில் வீரச்சாவடைந்த போராளிகளின் நினைவு நாட்கள் தொடர்ந்து அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது.

வவுனியா சிறைச்சாலையில் கடந்த காலங்களில் எந்த விதமான சோதனைகளும் நடத்தப்படவில்லை என்றும் கடந்த வெள்ளிக் கிழமை சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் இதன்போதே இது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TAGS: