இன்னொரு சபா பிஎன் பிரமுகர் விலகுவார் என அன்வார் எதிர்பார்க்கிறார்

இன்னொரு சபா அரசியல்வாதி இந்த வார இறுதியில் பக்காத்தான் ராக்யாட்-டுக்கு ஆதரவாக மாறுவார் என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இன்று கூறிக் கொண்டுள்ளார்.

அவர் அதனை பெட்டாலிங் ஜெயாவில் உள்ள பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

2008ம் ஆண்டு புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கு தாம் மேற்கொண்ட செப்டம்பர் 16 முயற்சியின் எஞ்சியுள்ள பகுதியே தமது இப்போதைய கூற்றுக்கள் எனச் சொல்லப்படுவதை அவர் நிராகரித்தார்.

“மக்களிடமிருந்து அதிர்ச்சி வரும். அது சபா மக்களுடைய எழுச்சி ஆகும். பல தலைவர்கள் அதில் சேர்ந்துள்ளனர். இன்னொருவர் விரைவில் இணைந்து கொள்வார் என அன்வார் சொன்னார்.