இலங்கை அதிகாரிகளுக்கு தண்ணி காட்டிய சீனர்!

இலங்கையில் இரத்தினக் கல் கண்காட்சி ஒன்றில் வைரக்கல் ஒன்றை விழுங்கியதாக காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்ட சீனர் உண்மையில் விழுங்கியது போலி வைரம் ஒன்றைத்தான் என காவல்துறையினர் கூறுகின்றனர்.

எல்லோருடைய கவனத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டு நிஜமான வைரக் கல்லை வேறு ஒருவர் திருடிச் செல்வதற்கு இடமளிப்பதற்காக இவர் இப்படிச் செய்துள்ளார் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்லை விழுங்கியவருக்கு பேதி மருந்து கொடுத்து கல்லை வெளியில் வரவழைத்து பரிசோதித்ததில், இது போலி வைரக்கல் என்பது தெரியவந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.

நிஜமான வைரக் கல்லை திருடிச் சென்ற இரண்டாவது சீனரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். திருடப்பட்ட 1.5 கெரட் வைரம் சுமார் 14 ஆயிரம் டாலர்கள் மதிப்புடையது என்று தெரிவிக்கப்படுகிறது.

TAGS: