இலங்கை மற்றும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு

இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், சிங்கபூரின் வெளியுறவுத் துறை அமைச்சர் கே.சண்முகத்தை நேற்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகின் பொது அவைக் கூட்டத்தில் பங்கேற்க சென்றுள்ள நிலையில் அவர்களுக்கு இடையிலான இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இதன் போது இலங்கையில் இடம்பெற்ற போரினால் பாதிப்படைந்த மக்களின் மீள்குடியேற்றம் குறித்தும் இச்சந்திப்பின்போது பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இலங்கை மற்றும் சிங்கப்பூருக்கு இடையில் தொழில்நுட்ப வளங்களை பகிர்ந்துகொள்வது தொடர்பிலும் அண்மையில் இலங்கையில் நடத்தப்பட்ட பொதுநலவாய நாடுகளின் வெளியுறவுகள் துறை அமைச்சர்களுக்கான மாநாடு குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளதாகலும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

TAGS: