டாக்டர் மகாதீர்: PKFZ விவகாரத்தில் நான் ஏமாற்றப்படவில்லை என நான் போலீசிடம் சொன்னேன்

சர்ச்சைக்குரிய PKFZ என்ற போர்ட் கிளாங் தீர்வையற்ற வாணிகப் பகுதி விவகாரத்தில் தாம் ஏமாற்றப்படவில்லை என தாம் போலீசாரிடம் சொன்னதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர்  முகமட் கூறியிருக்கிறார்.

“என் நினைவுக்கு எட்டிய  வரையில் அந்தத் திட்டத்துக்கு எந்த அமைச்சரும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை,” என மகாதீர் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டாக்டர் லிங் லியாங் சிக் மீதான ஊழல் வழக்கில் மகாதீர் நான்காவது பிரதிவாதித் தரப்பு சாட்சி ஆவார்.

தமது வாக்குமூலத்தைப் பதிவு செய்த அதிகாரிகளில் ஒருவர் தங்களுக்கு அது ஏற்கனவே தெரிந்திருந்தால் நாங்கள் லிங் மீது குற்றம் சாட்டியிருக்கவே மாட்டோம் எனச் சொன்னதாகவும் மகாதீர் நீதிமன்றத்தில் கூறினார்.

லிங்-கின் வழக்குரைஞரான வோங் கியான் கியோங் தொடுத்த கேள்விகளுக்கு பதில் அளித்த போது அவர் அவ்வாறு சொன்னார்.

போலீஸ் அதிகாரிகள் தம்மிடம் இரண்டு முறை வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர் என்று கூறிய மகாதீர் அந்த அதிகாரிகளில் ஒருவர் சூப்பரிடெண்ட் ஆர் ராஜகோபால் என்றும் அடையாளம் காட்டினார்.

TAGS: