ஆஸ்திரேலிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி

ஆஸ்திரேலியாவில் இருந்து நேற்று இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

2010-ஆம் ஆண்டு புகலிடம் கோரி ஆஸ்திரேலியா சென்ற 42 வயதுடைய நபர் ஒருவரே
நேற்று மாலை மெல்பேர்னில் இருந்து நாடுகடத்தப்படவிருந்த நிலையில், நேற்று காலை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் அவர் தமது நாடுகடத்தலுக்கு எதிராக நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கின் தீர்ப்பு நேற்று வழங்கப்பட்டது. அத்தீர்ப்பில், இலங்கையில் அவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில், அவரை ஆஸ்திரேலியா அரசாங்கம் நாடுகடத்த கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் குறிப்பிட்ட நபரை நாடு கடத்த வேண்டாம் எனக் கோரி அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள Maribyrnong Detention Centre  முன்பாக வேற்றினத்து மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதுடன் காவல்துறையினருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: