ஆயுதத்தை தூக்குமாறு சிங்கள அரசாங்கமே கோருகின்றது : மனோ எம்பி காட்டம்

ஆயுதங்களை தூக்குவதற்கு நாம் விரும்பவில்லை எனினும் சிங்கள அரசாங்கமே மீண்டும் ஆயுதத்தை தூக்குமாறு தமிழ் இளைஞர்களிடம் கோருகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இலங்கையின் தமிழர் தாயகப் பகுதிகளில் நிலையான சமாதானத்தை எதிர்பார்க்க முடியவில்லை என்பதுடன் தமிழர்கள் மீண்டும் ஆயுதத்தை தூக்குவதற்கான  சூழ்நிலையை ராஜபக்சே தலைமையிலான இந்த அரசாங்கமே ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கூறினார்.

இலங்கையில் 1971 மற்றும் 1989ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட புரட்சிகளினால் மரணமடைந்தவர்களை நினைவு கூர்வதற்கு சிங்களர்களுக்கு இடமளிக்கின்ற இந்த அரசாங்கம் போரில் மரணித்த தமிழ் மக்களை நினைவு கூர்வதற்கு இடமளிக்காமல் இடையூறுகளை ஏற்படுத்திவருகின்றது.

தமிழர்களின் இனப்பிரச்னைக்கு தீர்வு காணாமல் இழுத்தடித்துக்கொண்டிருக்கும் சிங்கள அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை மிதித்து நசுக்கிகொண்டிருக்கின்றது என மனோ மேலும் கூறினார்.

TAGS: