புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டமை காரணமாக இலங்கை அகதி தற்கொலை

australia refugeeஆஸ்திரேலியா, பேர்த் நகரிலுள்ள அகதிகள் முகாமில் தடுத்துவைக்கப்பட்டிருந்த இலங்கை அகதியொருவர் தனது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவரது புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்கு நாடுகடத்தப்படவிருந்த நிலையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திச் சேவைகள் தெரிவித்துள்ளன.

தற்கொலை செய்துகொண்ட நபரின் மனைவியும் பிள்ளையும் இலங்கையில் வசிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர் தொடர்பான தகவல்களை உடனடியாக வெளியிடுவதற்கு மறுத்துள்ள ஆஸ்திரேலிய குடிவரவு குடியகல்வுத் திணைக்களம், தற்கொலை செய்துகொண்ட நபர் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டதாகவும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளது.

இவர் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து மனக்கஷ்டத்தில் வாழ்ந்து வந்ததாக அந்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகள் தொடர்பில் சட்ட ரீதியான தொடர்புகளை மேற்கொள்ளும் சட்டத்தரணியொருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

TAGS: