ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்ற இலங்கை அகதிகள் இந்தியாவில் கைது

australia_refugeeஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமான முறையில் செல்ல முயன்ற இலங்கை அகதிகளை தமிழக காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.

தமிழகத்தில் மதுரை, ராமேஸ்வரம் மண்டபம் பகுதிகளில் உள்ள பல்வேறு முகாம்களில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் ஒரு முகவர் மூலம் சட்டவிரோதமான முறையில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு தப்பிச் செல்ல திட்டமிட்டனர்.

இதற்காக 28 பெண்கள், 10 ஆண்கள் 13 குழந்தைகள் உட்பட மொத்தம் 51 பேர் 3 வேன்களில் குமுளி வழியாக செல்வதாக கேரளா காவல்துறையினர் தமிழக கியூ பிரிவு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் காவல்துறை குழு ஒன்று குமுளி சென்று தேக்கடி ரோட்டில் தங்கியிருந்த அகதிகளை கம்பம் கொண்டு வந்து ஒரு மண்டபத்தில் தங்க வைத்தனர்.

‘விசாரணைக்குப் பிறகு தமிழகத்தில் உள்ள பல்வேறு முகாம்களில் மீண்டும் அவர்கள் அனைவரையும் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்படும்‘ என தமிழக காவல்துறையினர் கூறினர்.

TAGS: