தகவல் துறை: பிரதமர் பதவி விலகினார் என்ற செய்தி பொய்யானது

1info topதகவல் துறை, அதன் மின் இதழில் நஜிப் அப்துல் ரசாக் பிரதமர் பதவியிலிருந்து விலகினார் என்று செய்தியை வெளியிடவில்லை என்று அதன் தலைமை இயக்குனர் இப்ராகிம் அப்துல் ரஹ்மான் மறுக்கிறார். அதன் இணையத்தளத்தில் ஊடுருவல் நிகழ்ந்திருப்பதாக கூறுகிறார் அவர்.

1infoபிரதமர் பதவி விலகினார் என்ற அறிக்கை அதன் மின் இதழில் வெளியாகி இருந்தது. அதைக் கண்ணுற்ற சமூக வலைத்தளங்கள் அச்செய்தியை அப்படியே விரைந்து வெளியிட்டன.

அந்தப் பொய்யான செய்தியை அகற்ற தகவல் துறை உடனடி நடவடிக்கை எடுத்திருப்பதாக இப்ராகிம் இன்று அவசரம் அவசரமாக வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில், கூறினார்.

 

TAGS: