இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேர் இந்தோனேசியாவில் கைது

australia_refugeeஇந்தோனேசிய டியூங் தீவிற்கு அருகில் வைத்து சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பயணித்த படகு சேதமடைந்த காரணத்தினால் கடற் பரப்பில் 12 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்துள்ளனர். இந்நிலையிலேயே இந்தோனேசிய காவல்துறையினர் இவர்களை காப்பாற்றியுள்ளனர்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளான நிலையில் அப்படகோட்டி மற்றும் பணியாளர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இச் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்கள் 26 பேரில் 17 ஆண்கள், 4 பெண்கள், 3 ஆண் குழந்தைகள் மற்றும் 2 பெண் குழந்தைகளும் இருந்துள்ளனர்.

இவர்கள் தற்போது டியூங் தீவில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

TAGS: